மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் படாது: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
மதுரை: மக்கள் விரும்பாவிட்டால் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் மட்டுமல்லாது தங்களின் உடல்நலம் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாணவர்களும், இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து களத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது எனக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போராட்டக்குழு சந்தித்து கோரிக்கை விடுத்தது. மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக நெடுவாசலுக்கு சென்று பேராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக்கொள்வோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்த திட்டத்துக்கு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இல்லை. அப்படிபட்ட நிலையில் தமிழக மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள். தவறான புரிதல் காரணமாக மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் படாது. மக்கள் விரும்பினால் டெல்லியில் பெட்ரோலிய துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications