நிர்பயா வழக்கு: சிறார் குற்றவாளி விடுதலையை கண்டித்து திருவள்ளூரில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்: டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூரில் தமிழ்நாடு பெண்கள் சுதேசி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா என்ற ஜோதி சிங், ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களில் சிறார் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனையும், மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தற்போது சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு பெண்கள் சுதேசி இயக்கம் சார்பில் அதன் நிறுவனத்தலைவர் கலைச்செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், குற்றவாளியின் வயதை காட்டி சிறார் நீதிமன்றம் குற்றவாளியை காப்பாற்ற நினைப்பதாகக் கூறி, நீதிமன்றத்தின் செயலைகண்டித்து, சிறார் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications