நிர்பயா வழக்கு: சிறார் குற்றவாளி விடுதலையை கண்டித்து திருவள்ளூரில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்: டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூரில் தமிழ்நாடு பெண்கள் சுதேசி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா என்ற ஜோதி சிங், ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களில் சிறார் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனையும், மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தற்போது சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு பெண்கள் சுதேசி இயக்கம் சார்பில் அதன் நிறுவனத்தலைவர் கலைச்செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், குற்றவாளியின் வயதை காட்டி சிறார் நீதிமன்றம் குற்றவாளியை காப்பாற்ற நினைப்பதாகக் கூறி, நீதிமன்றத்தின் செயலைகண்டித்து, சிறார் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications