கயத்தாறு அருகே ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து.. ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்
தூத்துக்குடி: கயத்தாறு அருகே விபத்த்க்குள்ளான பேருந்தில் காயமடைந்தவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் மீது இன்னொரு பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசர்குளம் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரில் திடீரென ஒரு வாகனம் குறுக்கிட்டதையடுத்து ஓட்டுனர் பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதனையடுத்து, அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, காயமடைந்தவர்களி மீட்க விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் பலமாக மோதியது.
இதில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த கனிஷ்டா என்ற பெண் உயிரிழந்தார். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.