ஜெ. மரணத்திற்கு நீதி- அட்வான்ஸ் ஆக உண்ணாவிரதம் தொடங்கிய ஓபிஎஸ்
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு காலை 9 மணிக்கே உண்ணாவிரதப் போராட்டத்தை ஓ .பன்னீர் செவ்ம் தொடங்கினார்
சென்னை: ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலை 9 மணிக்கே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். காவல்துறை அனுமதி அளித்த நேரத்திற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில், மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்ளிடோர் கலந்துகொண்டுள்ளனர்.

காவல்துறை அனுமதி
காவல்துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காலை 10 மனியிலிருந்துதான் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், ஓ.பன்னீர் செல்வம் காலை 9 மணிக்கே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டார். அப்போது அங்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

9 மணிக்கே தொடக்கம்
காலை 9 மணிக்கு போராட்டம் தொடங்குவதற்கு காவல் துறையில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், அவர்கள் 10 மணிக்குத்தான் அணுமதி கொடுத்திருந்தனர். இருந்தாலும், ஓ.பி.எஸ் அணியினர் திட்டமிட்டபடி 9 மணிக்கே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

ஆவடியில் மாஃபா பாண்டியராஜன்
ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக அந்த கட்சியைச் சேர்ந்தவர்களே தனி அணியாக பிரிந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. ஆவடியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. அனைவரும் 9 மணிக்கே தங்களின் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சிபிஐ விசாரணை
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசி வருகின்றனர்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications