வர்தா புயலில் வேட்டியை மடித்துக்கொண்டு களமிறங்கி கலக்கினாரே ஓபிஎஸ்!
வர்தா புயலின் போது அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் வேட்டியை மடித்துக் கொண்டு களமிறங்கினாரே... இப்போது பழைய பன்னீர் செல்வத்தை பார்க்க முடியலையே.
Recommended Video

சென்னை: கடந்த ஆண்டு சென்னையை வர்தா புயல் தாக்கியபோது அப்போதைய முதல்வரும் தற்போதைய துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் செய்த பணியை யாராலும் மறக்க முடியாது.
புயல் தாக்கும் முன்பும், புயல் தாக்கிய பின்னரும் அவரது உடனடி மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் சென்னையை உடனடியாக மீட்டெடுத்தது. ஆனால் தற்போதைய மழைக்காலத்தில் மக்கள் ஓ.பி.எஸ்ஸை நினைவு கூருகிறார்கள்.
ஓபிஎஸ் அன்று செய்த காரியங்களை மக்கள் நினைவு கூர்ந்து பேசிக் கொள்கிறார்கள்.

தாண்டவமாடிய வர்தா புயல்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வர்தா புயல் கரையை கடந்த போது அப்பொழுது மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் மரங்கள் ஒடிந்து விழுந்தன.

ஓபிஎஸ் நடவடிக்கை
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. உடனடியாக களமிறங்கிய அப்போதய முதல்வர் ஒ. பன்னீர் செல்வம், புயல் மற்றும் மழையினால் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் 100 நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் 50 தொற்று நோய் தடுப்பு குழுக்கள் அமைத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார்.

ஓபிஎஸ் பணிகளுக்கு பாராட்டு
மின் விநியோக சீரமைப்பு பணியில் 4 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டனர். முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சென்னையில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முதல்வர் என்ற பந்தா எதுமின்றி மீட்பு பணியில் ஈடுபட்டார்.

மக்கள் பாராட்டிய ஓபிஎஸ்
2015ஆம் ஆண்டு சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் வெள்ளம் சூழ்ந்த போது அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களுடன் மக்களோடு மக்களாக சாலையில் இறங்கி நிவாரண பணிகளை செய்தார். அந்த பணியை மக்கள் பாராட்டினர்.

வெள்ளம் சூழ்ந்த சென்னை
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சென்னையை மீண்டும் தாக்கியுள்ளது. புறநகர் வெள்ளத்தில் மிதக்கிறது. அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் தங்களின் பணிகளை செய்து வருகின்றனர். எனினும் ஓ.பன்னீர் செல்வத்தை அதாவது முதல்வராக பன்னீர் செல்வம் செய்த பணிகளை நினைத்து பார்க்கின்றனர் மக்கள்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications