என் மகனை நிரபராதின்னு சொல்லலையே... எப்ப விடுதலைன்னும் தெரியலியே!- ஒரு தாயின் பரிதவிப்பு
சென்னை: தூக்கு தண்டனை ரத்தாகி, ஆயுள் தண்டனையா குறைக்கப்பட்டாலும், என் மகன் நிரபராதின்னு தீர்ப்பு வரவில்லையே, என்று ஆதங்கப்பட்டுள்ளார் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை இன்று ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
மேலும் தமிழக அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை தமிழ் உணர்வாளர்கள் வரவேற்றுள்ளனர். தன் மகன் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமற்றது என்பதை கடந்த 20 ஆண்டு காலமாக பல்வேறு மேடைகளில், நீதிமன்றங்களில் உரக்கச் சொல்லி, அவரது விடுதலைக்காக போராடி வருபவர் அற்புதம் அம்மாள்.
வரலாற்றில் தன் மகனுக்கு நீதி வேண்டி, இப்படியொரு தொடர் போராட்டத்தை முன்னெடுத்த தாயைப் பார்ப்பது அரிது. அவருக்கும் இந்தத் தீர்ப்பு ஒருவித நிம்மதியை அளித்தாலும், அது முழுமையானதாக இல்லை.
காரணம், செய்யாத குற்றத்துக்கு தொடர்ந்து தண்டனை அனுபவிக்கிறானே தன் மகன் என்பதுதான்.
இந்தத் தீர்ப்பில் தன் மகன் குற்றமற்றவன் என்பதை நீதிபதிகள் குறிப்பிடவில்லையே என்று ஆதங்கப்பட்டார் அற்புதம் அம்மாள். பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரியே, தான் உண்மையான வாக்கு மூலத்தைப் பதிவு செய்யவில்லை. பொய்யான ஒன்றைத்தான் உருவாக்கிக் கொடுத்தேன் என்று கூறிய பிறகு, என் மகன் எப்படி குற்றவாளியாக இருக்க முடியும் என்று கேட்கும் அற்புதம் அம்மாளின் கேள்வியில் உள்ள நியாயத்தை நீதிபதிகள் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?
"என் மகனுக்காக மட்டுமல்ல... தூக்கு தண்டனைக்கு எதிரான என் போராட்டத்திலிருந்து நான் ஓயப் போவதில்லை. என் மகன் நிரபராதி. அவன் எந்த தீவிரவாத வேலையையும் செய்தவனில்லை. ராஜீவ் கொலைக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைக்கு அனைவருக்குமே இது தெரியும். அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதே தவறானது. இதை நீதிமன்றத் தீர்ப்பில் எதிர்ப்பார்த்தேன். ஆனால் அப்படி எதையும் குறிப்பிடாதது ஏமாற்றமாக உள்ளது.
23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என் மகன்.. ஒரு நிரபராதி விடுதலையாகும் நாள் எப்போது... அந்த வார்த்தை இந்தத் தீர்ப்பில் இடம்பெறவே இல்லையே...," என்கிறார் தவிப்புடன் அந்தத் தாய்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications