விடுதலை செய்யக்கோரி... தமிழக ஆளுநரிடம் பேரறிவாளன் கருணை மனு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 24 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி தமிழக ஆளுநரிடம் கருணை மனு அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சுமார் 24 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபகாலமாக பேரறிவாளனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவருக்கு சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமது வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்படாதது, உடல்நிலை சரியில்லாதது மற்றும் பெற்றோரின் உடல்நிலை சரியில்லாதது போன்றவற்றை காரணம் காட்டி பேரறிவாளன் தமிழக ஆளுநரிடம் விடுதலை கோரி கருணை மனு அளித்துள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 161-வது பிரிவின் கீழ், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications