சிறையில் 30 போலீசார் என்னைத் தாக்கினர்... ஜாமீனில் வெளிவந்த பியூஷ் மனுஷ் கதறல்
சேலம்: சிறைக்குள் 30 காவலர்கள் இணைந்து கொண்டு மூங்கில் கம்புகளை கொண்டு கடுமையாக தாக்கியதாக ஜாமீனில் வெளியே வந்துள்ள சமூக சேவகர் பியூஷ் மனுஷ் கண்ணீருடன் தெரிவித்தார்.
சேலத்தில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவர் பியூஷ் மனுஷ். சமீபத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பியூஷ் மனுஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறைக்குள் அவரை சந்தித்த மனுஷின் மனைவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், போலீசார் சிறைக்குள் வைத்து தனது கணவரை கடுமையாக தாக்கியதாக தெரிவித்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பியூஷ் மனுஷுக்கு ஆதரவாக மக்கள் கருத்து கூற ஆரம்பித்தனர். இந்நிலையில், சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம், பியூஷ் மனுஷுக்கு 3 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது.
சிறை ஃபார்மாலிட்டிசை முடித்துக்கொண்டு இன்று மாலைதான் பியூஷ் மனுஷ் வெளியே வர முடிந்தது. சிறைக்கு வெளியே நிருபர்களிடம் பியூஷ் மனுஷ் கூறியது: சேலம் சிறைக்குள் சிறை கண்காணிப்பாளர் என்னை தாக்கிக் கொண்டிருந்தபோது சிறைக் காவலர்கள் 30 பேர் இணைந்து கொண்டு மூங்கில் கம்புகளை கொண்டு என்னைத் தாக்கினர். சிறை அறையில் இருந்து வெளியேற போலீசார் என்னை அனுமதிக்கவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக சேலத்தில் மரங்களை நட்டி வருகிறேன். எனக்கு நிகழ்ந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாது என்று தெரிவித்தார். மனுஷ் பியூஷை சந்திக்க அவரது பெற்றோர், மனைவி சிறைக்கு வெளியே காத்திருந்தனர். அவர்கள் மனுஷை கட்டி பிடித்து அழுதனர். பேட்டியளித்தபோது, பியூஷ் மனுஷின் கண்களிலும் நீர் வடிந்தது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications