தஞ்சை: ப்ளஸ் 2 மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை- தனியார் பள்ளிக்கு 1வாரம் லீவ்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதால் தனியார் பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவர் சந்தோஷ் குமார் வகுப்பறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பதற்றம் காரணமாக பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் நடுப்படுகை பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவரின் மகன் சந்தோஷ்குமார்,17. இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள லூது சேவியர் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார்.

ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் நேற்று காலை நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ள பள்ளிக்கு வந்த அவர், வகுப்பறையில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்காட்டுப்பள்ளி காவலர்கள் மாணவரின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
மாணவரின் தற்கொலை சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை விவகாரம் காரணமாக பள்ளிக்கு ஒருவார காலம் விடுமுறை அறிவித்து நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications