புதிய ரயில், சாலை, ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடக்க நிகழ்ச்சி, மணி மண்டம் திறப்பு.. களைகட்டிய ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, இன்று 5 நிகழ்ச்சிகளை திட்டங்களைத் தொடங்கியுள்ளோம் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை ராமேஸ்வரத்தில் திறந்து வைத்த பிரதமர் மோடி, ரயில், சாலை, நிலம் , கடல், நினைவுச்சின்னம் என 5 புதிய நிகழ்ச்சிகளை, தமிழகத்தில் தொடங்கியுள்ளோம் என்று பெருமிதமாக கூறினார்.
பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை திறந்துவைக்க டெல்லியிலிருந்து மதுரை வந்தார். தனி விமானம் மூலம் மதுரை வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்துக்கு வந்தார்.

பின்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணி மண்டபத்தை திறந்து வைத்து, மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில், " இன்று ராமேஸ்வரத்தில், ராமேஸ்வரம்- அயோத்தி புதிய ரயில், ராமேஸ்வரம்- தனுஸ்கோடி வரையில் சாலை, கலாம் நினைவுச் சின்னம், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எனப்படும் நீல புரட்சி திட்டம், பசுமை ராமேஸ்வரம் திட்டம் என்று 5 நிகழ்ச்சிகளை திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம். இது மகிழ்ச்சியாக பெருமிதமாக இருக்கிறது." என்று கூறினார்.
மேலும் அவர், " தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு உதவியுள்ளது. சென்னை, கோவை, தஞ்சை உள்ளிட்ட நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி நகரங்களை மேம்படுத்த ரூ4,700 கோடி நிதி உதவி அளித்தோம்.ஸ்மார்ட் நகரங்களில் மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மேம்படுத்தப்படும்." என்று மோடி தெரிவித்தார்.
" ராமேஸ்வரம் குறிப்பிட்ட மதத்துக்கான பூமி அல்ல. இது ஆன்மீக பூமியாகக் கருதப்படுகிறது. அப்துல் கலாம் போன்ற ஆழந்த சிந்தனையாளரை கொடுத்த பூமிதான் ராமேஸ்வரம்.
கலாம் நினைவு நாளில் இங்கு இருப்பதை, எனது பாக்கியமாக கருதுகிறேன். கலாம் மறைந்தபோது அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தேன். அதன்படி தற்போது கட்டி முடிக்கப்பட்டு இன்று அந்த நினைவுச் சின்னம் திறக்கப்பட்டுள்ளது என்றார் மோடி.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications