தமிழ் மண்ணிற்கு தலை வணங்குகிறேன்... பிரதமரின் "ஐஸ்" உரை!
தமிழ் மண்ணிற்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் கோர்வையாக பேசி அசத்தினார்.
Recommended Video

சென்னை : தமிழ் மண்ணிற்கு தலைவணங்குகிறேன், அன்புமிக்க சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் கோர்வையாக பேசி அசத்தினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். 5 பெண்களுக்கு ஸ்கூட்டருக்கான சாவியுடன், ஆர்சி புத்தகத்தையும் பிரதமர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது : அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம், தமிழ் மண்ணிற்கும் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். மகாகவி சுப்ரமணிய பாரதியின் மண்ணிலே நிற்பதை பெருமைப்படுகிறேன். பெண்ணே நீ படித்தால் குடும்பமே கற்றதாக அர்த்தம் என்று கோர்வையாக தமிழில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் தனது உரையை மோடி நிகழ்த்தினார். ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஜெயலலிதா எங்கு இருந்தாலும் தமிழக மக்களின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்து மகிழ்ச்சியடைவார்.
நான் இன்று அவருடைய கனவுத் திட்டமான அம்மா இருசக்கர திட்டத்தை தொடங்கி வைக்கிறேன். அதுவும் அவருடைய 70வது பிறந்தநாளில் தொடங்கி வைத்திருக்கிறேன். 70 லட்சம் மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் நடப்பட்டுள்ளது, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்த 2 திட்டங்களும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், இயற்கையை பாதுகாக்கவும் நீண்ட கால திட்டங்கள். பெண்களை முன்னேற்றுவதன் மூலம் ஒட்டு மொத்த குடும்பத்தையும் முன்னேற்றமடையச் செய்ய முடியும். ஒரு பெண்ணிற்கு கல்வி அளித்தால் அந்த குடும்பத்திற்கே கல்வி அளித்தது போல, ஒரு பெண்ணிற்கு சுகாதாரம், பாதுகாப்பு அளித்தால் அதுவும் அந்த குடும்பத்திற்கே செய்யும் நன்மை.
மத்திய அரசு இந்த இலக்கை நோக்கி தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிமைபடுத்துவதற்கான முயற்சிகளைத் தான் அரசு செய்து வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications