பாமகவின் 4 மற்றும் 5வது வேட்பாளர் பட்டியல்... இதுவரை 229 தொகுதிகளுக்கு வேட்பளர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 18 பேர் கொண்ட மூன்றாம் பட்டியலும் 4 பேர் கொண்ட 5ஆவது பட்டியலையும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்பட்டது.
பாமகவின் 4வது கட்ட வேட்பாளர் பட்டியல்:
கிணத்துக்கடவு - சின்னசாமி
சிங்காநல்லூர் - அசோக் ஸ்ரீபதி
பொள்ளாச்சி - கண்ணப்பன்,
திருக்கோவிலூர் - பால.சக்தி
திருவாடனை - பாண்டி,
பவானி ராமநாதன்
அந்தியூர் - கோபால்
சேலம் தெற்கு - குமார்
முசிறி - மனோகரன்
வேளச்சேரி - வினேபா பூபதி,
மயிலாப்பூர் - மீனாட்சி ஆனந்த்
சைதாப்பேட்டை - சகாதேவன்
விருகம்பாக்கம் - ஜெயராவ்
அண்ணாநகர் - அகிலேஷ் அரனிமல்லிச்செட்டி
ஆயிரம் விளக்கு - ரங்கநாதன்,
வில்லிவாக்கம் - சுப்பிரமணியன்
பெரம்பூர் - வெங்கடேசன் பெருமாள்
ராயபுரம் - பெருமாள்
பாமகவின் 5வது பட்டியல்:
தருமபுரி -டாக்டர் செந்தில்
பாலக்கோடு - சரவணன்
பாப்பிரெட்டிபட்டி - சத்திய மூர்த்தி
அரூர் (தனி) - முரளி
முன்னதாக பாமகவின் 3வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக அன்புமணி பதவி வகித்து வருகிறார். முதன்முறையாக தற்போது அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதேபோல், மேட்டூர் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணியும், வந்தவாசியில் வடிவேலு ராவணனும் போட்டியிடுவதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது வெளியிடப்பட்டுள்ள 4வது மற்றும் 5 வது பட்டியலோடு சேர்த்து இதுவரை 229 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.