மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா.. "மக்கள் கவிஞன்" இன்குலாப் மறைந்தார்
ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் நீங்காத பாடலை விதைத்த மக்கள் கவிஞன் இன்குலாப் இன்று இயற்கை எய்தினார்.
சென்னை: மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா பாடல் ஒலிக்காத போராட்டக் களங்களும், கருத்தரங்களும் இல்லை என்று சொல்லிவிடலாம். அப்படி, ஒடுக்கப்பட்ட, தலித் மக்களின் போராட்டங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த குரல் இன்று அமைதியானது. கவிஞர் இன்குலாப் உடல் நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
பிறப்பால் இஸ்லாமியராக பிறந்தாலும், தனது மத அடையாளங்களை துறந்து மக்களுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர் இன்குலாப். சாகுல் அமீது என்ற தனது இயற்பெயரை இன்குலாப் என்று விடுதலையின் சின்னமாக மாற்றிக் கொண்டவர்.

தமிழ் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர் என பன்முகம் கொண்ட இன்குலாப், பொதுவுடைமைச் சிந்தனையால் கவரப்பட்டவர். அவருடைய படைப்புகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது. தராசு இதழில் தொடராக வந்து பின்னர் புத்தகமான துப்பாக்கிகள் பூவாலிகள் என்ற புத்தகம் மிக முக்கியமான படைப்பு. சங்க கால ஔவையை பற்றி நமக்குள்ள பல்வேறு மூடநம்பிக்கைகளை உடைத்து ஒரு உண்மையான தமிழ் ஔவை பெண்மணியை நமக்கு நாடகமாக ஆக்கிக் கொடுத்தவர்.
கீழக்கரை ஊரில் பிறந்த இன்குலாப், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியிலும், பின்னர், மதுரைத் தியாகராயர் கல்லூரியிலும் தமிழ் படித்தவர். சென்னையில் புதுக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தவர். அவருடைய இலக்கிய பணிகளுக்காக சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications