சென்னையில் நேற்றிரவு திடீர் மின்வெட்டு ஏன்? விளக்கம் சொல்லும் அதிகாரிகள்
சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்பேடு துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக தான் இந்த மின்வெட்டு ஏற்பட்டது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். திடீர் மின்வெட்டுக்கு காரணம் தெரியாமல் பலரும் தவித்தனர்.

மின்தடையை ஏற்படுத்தி விட்டு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாகவும் சிலர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கோயம்பேடு துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக தான் இந்த மின்வெட்டு ஏற்பட்டது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்வாரிய மூத்த ஆதிகாரி ஒருவர், கோயம்பேடு துணை மின்நிலையத்தில் அதிக சுமை காரணமாக, கேபிள்களில் தீ பற்றியது. இந்த தீ அடுத்தடுத்து பரவியது. இதனால், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் சென்னையின் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. அதன்பின்னர், இன்று விடியற்காலை 1 மணியளவில் அணைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், சில மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக இன்று காலை 7 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் விரைவில் மின்விநியோகம் செய்யப்படும் என்றார்.
போதுமான மின் இருப்பு கைவசம் இருந்தாலும், கோடை காலங்களில் இது போன்று சில இடையூறுகள் ஏற்படுவதால் மின்வெட்டு ஏற்படுபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications