கோடி கோடியா லஞ்சம் வாங்கிட்டு 'நேர்மை' உதார்விட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்- கொதிக்கும் மக்கள்!
சசிகலா கோஷ்டியிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிவிட்டு நேர்மையின் சிகரங்களாக உதார்விட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
சென்னை: அதிமுக சசிகலா கோஷ்டியிடம் சரணாகதி அடைந்து பெட்டி பெட்டியாக கோடி கோடியாக லஞ்சம் வாங்கிவிட்டு ரொம்பவும் 'நேர்மையாளர்கள்' போல கூவத்தூர் ரிசார்ட்டில் உதார்விட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது மக்கள் மீண்டும் கோபக்கனலை கொட்டி வருகின்றனர்.
கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலாவின் பிடியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடிமைகள் போல அடைந்து கிடந்தனர். அப்போது கூவத்தூரில் டேரா போட்ட அத்தனை அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொகுதிகளுக்குள் எந்த ஒரு எம்.எல்.ஏவுமே நுழையவே முடியாத நிலை உருவாகி இருந்தது. அதிமுக தொண்டர்கள் கூட இந்த எம்.எல்.ஏக்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஓபிஎஸ் பக்கம் சாரை சாரையாக போனார்கள்.

திமுக மீது பழி
அப்போது நியாயவான்கள் போல பேசிய அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுகவின் சதியை முறியடிக்கவே சின்னம்மா சசிகலாவுடன் இருக்கிறோம் என மாய்மால வார்த்தைகளை கூறி அதிமுக தொண்டர்களை திசை திருப்ப பார்த்தனர். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள மறுத்த அதிமுக தொண்டர்கள் பலரும் கட்சியை விட்டே வெளியேறிவிட்டனர்.

ஞானிகள் போல டிராமா
அதேபோல் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பிடித்து வைத்த ஒன்றைப் போல வாய்பொத்தி அமைதியாக 'ஞானிகளை' போல அதிமுக எம்.எல்.ஏக்கள் கப்சிப்பென்று இருந்தனர். அப்போதும் திமுகவினர் ரகளை செய்வார்கள் எனத் தெரிந்தேதான் இப்படி இருந்தோம் என ஜால்ஜால்ப்பு சொன்னவர்கள் அதிமுக எம்.எல்.ஏக்கள்.

கூவத்தூர் ஒப்பாரி
ஆனால் சசிகலா கோஷ்டியிடம் பல கோடி ரூபாய் பணத்தையும் தங்கத்தையும் பெட்டி பெட்டியாக வாங்கி அமுக்கிக் கொண்டுதான் உத்தமசீலர்களைப் போல அதிமுக எம்.எல்.ஏக்கள் காட்டிக் கொண்டனர். அதுவும் கூவத்தூர் ரிசார்ட்டில் இரண்டு இரண்டு பேராக வெளியே வந்து, நாங்கள் நேர்மையின் சிகரம்; சுதந்திர மனிதர்கள்; எங்களை எவரும் அடைத்து எல்லாம் வைக்கவில்லை என ஒப்பாரி வைத்துவிட்டுப் போனார்கள்.

மீண்டும் கொந்தளிக்கும் மக்கள்
இந்த உதார்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் பின்னால் இத்தனை கோடி ரூபாய் பேரம் நடந்திருப்பதை கூவத்தூரில் கும்மியடித்த எம்.எல்.ஏ.க்களே அம்பலப்படுத்திவிட்டனர் இப்போது. இதனால் மீண்டும் சசிகலா கோஷ்டி அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் கடும் கோபத்தை சமூக வலைதளங்களில் காட்டி வருகின்றனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications