ஜல்லிக்கட்டு காளைகளை பேணிக் காக்க ஆராய்ச்சி நிலையம்.. சட்டசபையில் பாலகிருஷ்ண ரெட்டி அறிவிப்பு
ஜல்லிக்கட்டு காளைகளை பேணிக் காக்க ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை: காங்கேய காளைகள் மற்றும் புலிக்குளம் காளைகளை பேணி பாதுகாக்க ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அறிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் கால்நடைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கேயம் காளைகளை காக்க ரூ.2.50 கோடி செலவில் ஈரோட்டில் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் பயன்படுத்தப்படும் புலிக்குளம் மாடுகளை பேணிக் காக்க ஆராய்ச்சி நிலையம் ஒன்றை சிவகங்கை மாவட்டத்தில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தவிர, ஏழை மக்களுக்கு தொடர்ந்து வாழ்வாதாரம் கிடைக்க 6.47 கோடியில் புழக்கடை கோழி அபிவிருத்தி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலப்பின கால்நடையின் உற்பத்தி மற்றும் கரு உருதல் திறனை அதிகரிக்க 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்கும் வகையில் 100 சிறு பால்பண்ணைகள் அமைக்க 1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓசூரில் 6.75 கோடியில் நாட்டுக் கோழி பெருக்க வளாகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டினப் பசுக்களின் மரபுதன்மையை பாதுகாக்க 50 லட்சத்தில் கால்நடை பண்ணை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சட்டசபையில் அறிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications