கட்டாய கல்வி சட்டம்- நடப்பாண்டில் 89 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு
நெல்லை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடப்பாண்டு தனியார் பள்ளிகளில் 89 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டம் (ஆர்டிஇ) மூலம் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும் என கடந்த ஆண்டு முதல் உத்தரவு அமலுக்கு வந்தது.
இதன்படி மெட்ரிகுலேசன் முதலான தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் இந்த குறிப்பிட்ட 3 வகுப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதம் இடம் ஏழை மாணவர்களுக்கு ஓதுக்க வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உரிய கட்டணத்தை மத்திய அரசு வழங்குகிறது.
கடந்த ஆண்டு இந்த சட்டம் தொடர்பாக அதிக விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த எண்ணிக்கையில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதை அடுத்து இந்த கல்வி ஆண்டு முதலே இச்சட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக கல்வி துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தி உரிய ஆலோசனைகளை பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கினர்.மேலும் இந்த சட்டம் தொடர்பாக பள்ளிகளில் விளம்பர போர்டு வைக்கவும் அறிவுறுத்தினர்.
இதன் எதிரொலியாக இந்தாண்டு தமிழகத்தில் 452 தனியார் பள்ளிகளில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர்.
மெட்ரிக் கல்வி துறையில் பக்கம் 42586 பேரும், தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள தனியார் பள்ளிகளில் 43837 பேரும், பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும் உள்ள பள்ளிகளில் 2969 பேரும் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கல்வி கட்டணம் ரூ.35 கோடி ரூபாய் இதுவரை தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிதியை வழங்க கல்வி துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications