சசிகலா பொதுச் செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையத்தில் 61 பக்க அறிக்கை தாக்கல் செய்தது ஓ.பி.எஸ். அணி
சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் இன்று பதில் மனு தாக்கல் செய்தனர்.
சென்னை: சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் அணியினருக்கு அனுப்பி இருந்தது. அதற்கான பதிலை ஓபிஎஸ் அணியினர் இன்று வழங்கினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணி மனு அளித்தது.
இதையடுத்து, இம்மனுவிற்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி கடந்த 10ம் தேதி, 70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலா தனது வழக்கறிஞர்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். அதில், அதிமுக சட்டவிதிகளின்படியே பொதுச் செயலாளர் நியமனம் நடந்ததாக தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ் அணிக்கு நோட்டீஸ்
சசிகலா அனுப்பி இருந்த பதில் மனுவை அடுத்து, இப்பதிலுக்கு மார்ச் 14ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

பதில் மனு
தேர்தல் ஆணையத்தின் இந்த நோட்டீஸுக்கு, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலாவின் பதிலுக்கான விளக்கத்தை தயார் செய்து, தேர்தல் ஆணையத்திடம் இன்று தாக்கல் செய்தனர்.

சசிகலா நியமனம் செல்லாது?
கட்சி பொதுக் குழுவுக்கோ, செயற்குழுவுக்கோ பொதுச் செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கிடையாது. தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே அதிமுகவில் கிடையாது. இதன் அடிப்படையில் சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

அடிப்படை உரிமை
கட்சிப் பொதுக் குழுவுக்கு விதிகளை மாற்றுவதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே கட்சிப் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அதிமுக விதிகளில் கூறப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் அணி விளக்கம் அளித்துள்ளது. 61 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications