பள்ளி பேருந்தில் கை துண்டிக்கப்பட்ட சிறுமி - இழப்பீடு கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆம்பூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பள்ளி பேருந்தில் மாணவி கை துண்டிக்கப்பட்டதையடுத்து அதற்கு இழப்பீடு வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் பொதுமக்கள்.
பேரணாம்பட்டு அருகே சாத்கர் கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்தவர் வேதாச்சலம். அவரது மகள் தாரகை. பல்லலகுப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறாள். தினமும் மாணவி பள்ளி பேருந்தில் சென்று வந்தாள். கடந்த மாதம் 20 ஆம் தேதி பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மாணவி தாரகை பள்ளி பேருந்தில் அமர்ந்திருந்தாள். பேருந்து ஓடும்போது மாணவி கையை வெளியே நீட்டியதாக தெரிகிறது.

அதில் மாணவியின் கை நசுங்கி படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து டிரைவர் சிலம்பரசனை கைது செய்தனர். மேலும் மாணவியின் மருத்துவ செலவுகளை பள்ளி நிர்வாகம் ஏற்றுள்ளது. சிகிச்சையில் மாணவியின் வலது கை துண்டிக்கப்பட்டு வீடு திரும்பினாள்.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கை துண்டிக்கப்பட்டதால் மாணவிக்கு உரிய இழப்பீடு கேட்டு பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளிக்குள் மாணவர்களை செல்ல அனுமதிக்காமல் போராட்டம் நடத்தியதால் பள்ளி மாணவர்கள் அருகில் இருந்த தேவாலய வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மேல்பட்டி போலீசார் பள்ளிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications