பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் 1லட்சம் போலீசார் பாதுகாப்பு
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்கள், பிரபலகோவில்களில் தீவிர சோதனைகளுக்குப் பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (டிசம்பர் 6) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 4 கூடுதல் கமிஷனர்கள், 4 இணை கமிஷனர் கள், 19 துணை கமிஷனர்கள் தலை மையில் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களுக்குவரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளின் உடைமைகள் நவீன கருவிகள் மூலமாக சோதனை செய்யப்படுகிறது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல விமானநிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிச. 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனையடுத்து இரு பிரிவினருக்கு இடையே பெரும் கலவரம் மூண்டது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிச.6-ஆம் தேதியன்று எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications