ரேசனில் பருப்பு வாங்கச் சொல்லி யாரையும் கட்டாயபடுத்தலையே - செல்லூர் ராஜூ
ரேசன் கடையில் பருப்பு வாங்கச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ரேசன் கடையில் பருப்பு வாங்கினால்தான் இலவச அரிசி போடுவோம் என்று நாங்கள் கூறவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ரேசனில் பருப்பு வாங்கச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பசுமை பண்ணை காய்கறி கடைகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. சின்ன வெங்காயம் என்ற பெயரில் பெரிய வெங்காயத்தை அதுவும் அழுகிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, காய்கறி விற்பனையில் முறைகேடு நடக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டதாக கூறினார்.

பசுமை பண்ணை காய்கறிகள்
விலைவாசிகளை குறைப்பதே பசுமை பண்ணைக்கடைகளின் நோக்கம் என்றும் தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது ரேசன் கடைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை செய்யப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பருப்பு வாங்க கட்டாயபடுத்தவில்லை
அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ரேசன் கடைகளில் பருப்பு வாங்கச் சொல்லி யாரையும் கட்டாயபடுத்தவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், பருப்பு வாங்கினால்தான் இலவச அரிசி தருவோம் என்று கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

தரமான பொருட்கள் கிடைக்காதா?
அமைச்சர் சொல்வதைப் பார்த்தால் விலைகுறைவாக விற்பனை செய்யப்படும் பொருள் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்று கூறுகிறாரா? அல்லது அப்படித்தான் கொடுப்போம் இஷ்டமிருந்தால் வாங்குங்கள், இல்லாவிட்டால் அதிக விலை கொடுத்து கடையில் வாங்குங்கள் என்று கூற வருகிறாரா தெரியவில்லை.

அரிசியும் அப்படித்தானோ?
ரேசன் கடைகளில் படிப்படியாக பொருட்கள் விற்பனையை குறைத்து வருகின்றனர். இலவச அரிசியின் தரம் சொல்லவே வேண்டாம், கேட்டால் இலவசத்திற்கு அப்படித்தான் தருவோம் வேண்டுமென்றால் வாங்குங்கள் உங்களை கட்டாயப்படுத்தவில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள் போல. அப்போ ஏழைகள் தரமான பொருட்களை சாப்பிடக்கூடாதா?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications