சிவாஜி சிலை இடமாற்றம்: ரசிகர்கள் அமைதி காக்க ராம்குமார், பிரபு வேண்டுகோள்
சென்னை: சென்னை காமராஜர் சாலையில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலையை இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புவதாக அவரது மகன்கள் பிரபு, ராம்குமார் தெரிவித்துள்ளார்.
சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் ராம்குமார், பிரபுவின் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை கடற்கரை காமராஜ் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் பொறுப்பை அரசின் முடிவுக்கே விட்டிருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும், இது சம்பந்தமாக எந்தவித போராட்டமோ, ஆர்ப்பட்டமோ தற்போது செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இதுதொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். அதுவரை அமைதி காக்கும்படியும், எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.
சென்னையில் காந்தி சிலை எதிரே, காமராஜர் சாலை-டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு 2006-ம் ஆண்டு சிலை வைத்தது.
இந்த சிலை, காந்தி சிலையை மறைப்பதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், எனவே சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி பி.என்.சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவது குறித்து தமிழக அரசு விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications