வைக்கோல் விலை அதிகரிப்பு : மழை இல்லாததால் தென்மாவட்டங்களில் கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாடு
மழை இல்லாததால் தென்மாவட்டங்களில் கால்நடை தீவனங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நெல்லை : நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வைக்கோல் விலை அதிகரித்துள்ளதால், கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக எந்தவித சாகுபடியும் சரியாக நடக்கவில்லை. போதிய மழை இல்லாததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, இரு மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு சமீபத்தில் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் கால்நடை வளர்ப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறண்டு போன பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாக விவசாயிகள் விற்பனைக்கு கொடுப்பர். ஆனால் கடந்த ஆண்டு விவசாயிகள் நாற்று நடவே முன்வராத நிலையில் வைக்கோலுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் நெல்லை, தூத்துக்குடியில் வைக்கோலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. நெல்லை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கோல் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டு ரூபாய் 200 வரை விற்கப்படுவதால் பலர் வாங்கவே தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் வைக்கோலை அறுத்து கட்டி கொடுக்கும் ஆள்களுக்கு கூலி கொடுக்க வேண்டியிருப்பதால் அதற்கும் சேர்ந்து விவசாயிகள் பணம் கேட்பதால் வியாபாரிகள் தடுமாறி வருகின்றனர்.
இதுகுறித்து நெல்லையை சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் சிலர் கூறுகையில், தற்போது வயல்களில் அறுவடை முடிந்தும் வைக்கோல் விலையில் மாற்றம் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் கால்நடைகள் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications