சசிகலாவிற்கு முதுகு வலி.. ஃபெரா வழக்கில் நேரில் ஆஜராக வேண்டுமா?.. நீதிமன்றம் மே 4ல் முடிவு
அந்நியச் செலாவணி வழக்கில் சசிகலா நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்கும் மனு மீது வரும் 4ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை: அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் நேரில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டுமா அல்லது காணொலி மூலம் ஆஜராக வேண்டுமா என்பது வரும் மே மாதம் 4ம் தேதி தெரிய வரும்.
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் நேரில் ஆஜராவதற்குப் பதிலாக காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த 2 தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலா, அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக 1996ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலாவிற்கு முதுகு வலி இருப்பதால் நீண்ட தூரம் காரில் பயணம் செய்ய முடியாது என்றும் அதனால், காணொலி மூலம் சசிகலா ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.
விசாரணையின் முடிவில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டுமா வேண்டாமா என்பது வரும் மே மாதம் 4ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலாவின் உறவினரான பாஸ்கரன் மே மாதம் 4ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications