ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி கேமரா.. தனியார் பள்ளியை மிஞ்சும் மாநகராட்சிப் பள்ளி - அசத்தும் வீடியோ
தனியார் பள்ளி என்ன தனியார் பள்ளி.. லட்சம் லட்சமாய் கட்டணம் கேட்கும் பள்ளிகளை மிஞ்சும் வசதிகளைக் கொண்ட மாநகராட்சி பள்ளியின் வீடியோவை காணுங்கள்.
சென்னை: ஏசி வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி கேமரா கண்காணிப்பு என தனியார் பள்ளிகளை மிஞ்சம் மாநகராட்சிப் பள்ளி வட சென்னையில் இயங்கி வருகிறது.
கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் சென்னை உயர்நிலைப்பள்ளிதான் இவ்வளவு வசதிகளோடு இயங்கி வருகிறது. பள்ளிச் செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் வண்ண வண்ண மீன்கள் வரவேற்கின்றன.
மாணவர்கள் விளையாடி மகிழ அழகிய தோட்டங்கள் உருவாக்கப்பட்டு அங்கு பறவைகளும் வளர்க்கப்படுகின்றன. மாணவர்கள் வேர்க்க வேர்க்க அமர்ந்து பாடம் கற்கும் வகையில் ஃபேன் கூட இல்லாத வகுப்பறைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் பள்ளிக் கூடத்தில் ஏசி வசதியுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் கிளாஸ்
இந்தப் பள்ளிக் கூடத்தில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் என்று சொல்லக் கூடிய நவின வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டு மாணவர்களின் கற்கும் திறன் இதனால் அதிகரித்துள்ளது.

சிசிடிவி கேமரா
பள்ளிக் கூடத்திற்கு வரும் மாணவிகளுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளியின் நுழைவு வாயில் மற்றும் வகுப்பறையில் சிசிடிவி கேமரா க்கள் பொறுத்தப்பட்டு 24 மணி நேரம் பாதுகாப்பு வளையத்திற்கு பள்ளிக் கூடம் கொண்டு வரப்பட்டுள்ளது.
|
வீடியோ
இந்த மாநகராட்சிப் பள்ளியில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படிக் கூடவா மாநகராட்சிப் பள்ளி செயல்படுகிறது என்று வாய் பிளந்து பலரும் பார்த்து வருகின்றனர்.

சதம் எடுத்து சாதனை
இதுதவிர, இன்று வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவில் இந்தப் பள்ளிக் கூடம் 5வது முறையாக 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த சாதனையைப் பாராட்டி சென்னை மாநகராட்சி கல்வி துணை ஆணையர் கோவிந்தராவ் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுபாஷ்சந்திரனுக்கும், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறனுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications