10ம் வகுப்பு... மாநில அளவில் 2 இடங்களைப் பிடித்த நெல்லை மாற்று திறனாளி மாணவர்கள்
நெல்லை: பத்தாம் வகுப்பு தேர்வில் பாளை பார்வையற்றோர் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த கல்வி ஆண்டு முதல் பார்வையற்ற மாணவர்களுக்கும் மாநில அளவில் தனி ரேங்க் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது.

அதன்படி பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளி மாணவர் செய்துங்கநல்லூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் 500க்கு 489 மதிப்பெண் எடுத்து மாநில அளவில முதலிடம் வந்துள்ளார். இவர் தமிழ்-97, ஆங்கிலம்-95, கணிதம்-100, சமூக அறிவியல்-99, அறிவியல்-100 என எடுத்துள்ளார். இவரது தந்தை கோவர்த்தனன் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். தாய் சமுத்திரகனி வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார்.
இது குறித்து மாணவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நன்கு ஊக்கம் அளித்தனர். இதனால் தொடர்ந்து இதே பள்ளியில் படிப்பேன். பள்ளி இறுதி தேர்விலும் இதே இடத்தை தக்க வைப்பேன்' என்றார்.
இதேபோல், இதே பள்ளியை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் ஜம்புலிங்கபுரத்தை சேர்ந்த மாணவி ராணி 470 மதிப்பெண் எடுத்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இவர் தமிழ்-92, ஆங்கிலம்-86, கணிதம்-93, அறிவியல்-99, சமூக அறிவியல்-100 என எடுத்துள்ளார்.
இது குறித்து மாணவி ராணி கூறுகையில், ‘நான் முதலில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள பள்ளியில் பயின்றேன். எனக்கு பார்வை திறன் குறைபாடாக இருப்பதை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து படிக்காமல் படிப்பை நிறுத்தினேன். பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளி குறித்து கேள்வி பட்டதும் இங்கு மீண்டும் சேர்ந்து 10ம் வகுப்பு படித்தேன். மாநில அளவில் இரண்டாம் இடம் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தந்தை முருகேசன் தோட்ட தொழில் செய்து வருகிறார். எனது சகோதரர் பாலகிருஷ்ணன் கேட்டரிங் படித்து விட்டு வேலை செய்து வருகிறார். நான் தொடர்ந்து உயர் கல்வி பயின்று ஆசிரியராக பணியாற்றி விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications