ப்ளஸ் 1 படிக்க அரசு பள்ளிகளில் இடமில்லை - திண்டாடும் மாணவர்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ப்ளஸ் ஒன் வகுப்பிற்கு விரும்பிய பாடத்தில் சேர இடம் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் திண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு 10, பிளஸ்டூ தேர்வுகளில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளும் மாநில ரேங்க் பெற்று சாதனை படைத்தனர். இந்த தேர்ச்சி காரணமாக உயர் கல்விக்கு பள்ளிகளில் இடம் கிடைப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக பிளஸ் 1 படிப்பதற்கு பல பள்ளிகளில் இடம் இல்லை.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த உடனே பல பள்ளிகளில் சேர்க்கை முடிந்து விட்டது. தனியார் பள்ளிகளை பொருத்தவரை 490 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களை மட்டும் சேர்த்து கொண்டு மற்றவர்களை திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் அதற்கு கீழ் மதிப்பெண் எடுத்தவர்கள் தங்கள் விரும்பிய பாடம் கிடைக்குமா என்று சந்தேகத்துடன் பல இடங்களுக்கும் அழைந்து வருகின்றனர்.
வரும் 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10ம் வகுப்புகளுக்கு பாடங்கள் தொடங்கப்பட்டு விட்டன. இந்நிலையில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் பல மாணவிகள் திண்டாடி வருகின்றனர்.
பலர் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள பள்ளியாக இருக்க வேண்டும் என்றும், விரும்பிய பாடம கிடைக்க வேண்டும் என்று தவியாய் தவித்து வருகின்றனர். இவர்கள் நலன் கருதி அரசு ஆண்டு தோறும் தரம் உயரும் பள்ளிகளின் பட்டியலை காலதாமதமின்றி அறிவிக்க வேண்டும் என பெற்றோரே ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
எந்த மாவட்டத்தில் எந்த பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன என்பது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பை கல்வி துறை இப்போதே வெளியிட வேண்டும். அப்போதுதான் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் இருக்கும் மாணவ, மாணவிகள் உடனடியாக அங்கு சேர்ந்து பயில வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications