நெல்லை அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்! நோயாளிகள் அவதி
நெல்லை: பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களும், காவலாளிகளும் சுமார் 250 பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.
மதுரையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இதற்காக காண்டிராக்ட் எடுத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும், காவலாளிகளுக்கும் சம்பளம் வழங்கி வருகிறார்கள்.

இதில் பெண் துப்புரவு தொழிலாளர்கள் மட்டும் சுமார் 150 பேர் உள்ளனர். இந்த துப்புரவு பணியாளர்களுக்கும், காவலாளிகளுக்கும் தற்போது புதிய மேலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பணிக்கு வந்த துப்புரவு பணியாளர்களும், காவலாளிகளும் பணிக்கு செல்லாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் தரையில் அமர்ந்து ஒன்று கூடி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு வார விடுமுறை விடப்பட வேண்டும், ஓய்வறை ஒதுக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பழைய மேலாளரை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணிகள், பாதுகாப்பு பணிகள் இன்று முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. நோயாளிகளை ஸ்டிரெச்சரில் வைத்து வார்டுகளுக்கு கொண்டு செல்ல துப்புரவு தொழிலாளர்கள் வராததால், நோயாளிகளின் உறவினர்களே ஸ்டிரெச்சரை தள்ளி சென்றனர். கழிவறைகள், சாப்பிடும் அறைகள் சுத்தம் செய்யாமலும் ஏராளமான பணிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications