ஜெயலலிதா மறைவு துயரில் இருந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்
ஜெயலலிதாவிற்கு இதயமுடக்கம் என்று கேள்விப்பட்டதில் இருந்து ஸ்தம்பித்த தமிழகம் அவரது மரணத்திற்கு பின்னர் முற்றிலும் முடங்கியது. தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் தற்போது மெல்ல அந்த துயரத்தில் இருந்து மீண்டு வருகின்றனர்.
ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் 75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஞாயிறு இரவு அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதய முடக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயங்கவில்லை.
24 மணிநேர தீவிர சிகிச்சைக்குப் பின்னர் திங்கட்கிழமை இரவு ஜெயலலிதா மரணமடைந்து விட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. இந்த செய்தி தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அரசு, தனியார் நிறுவனங்கள் நேற்று விடுமுறை விடப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மக்களின் அஞ்சலிக்குப் பின்னர் செவ்வாய்கிழமை மாலை அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வரின் மரணம் கட்சி சார்பின்றி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

பணிக்கு செல்லும் மக்கள்
இந்நிலையில் இன்று காலை முதல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தனியார், அரசு நிறுவனங்களுக்கு அன்றாடம் பணிக்குச் செல்பவர்களால், வெறிச்சோடி கிடந்த சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்கள் செல்ல ஆரம்பித்துவிட்டன.

இயல்பு நிலை
தமிழகம் முழுவதும் பல பகுதிகளிலும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தலைநகர் சென்னையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா தனது போயஸ் தோட்டத்து வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் ராதாகிருஷ்ணன் சாலையில் வாகனங்கள் செல்லத் தொடங்கியுள்ளன.

முதல்வரின் வாகனம்
இனி இந்த சாலையில் முதல்வரின் கான்வாய் செல்லப் போவதில்லை, அம்மாவை இனி எப்போதும் பார்க்கவே முடியாது என்பதுதான் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் சோகம். சட்டசபை நடக்கும் போதும், தினசரி தலைமைச் செயலகத்திற்கு செல்லும் ஜெயலலிதாவைக் காணவும் ஏராளமானோர் ராதாகிருஷ்ணன் சாலையிலும், சென்னை மெரீனா கடற்கரை சாலையிலும் காத்துக்கொண்டிருப்பார்கள்.

வணங்கும் தொண்டர்கள்
போயஸ்தோட்டத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை பிளெக்ஸ் போர்டுகள் முளைத்திருக்கும். இப்போது அம்மாவிற்கு இரங்கல் என்ற போஸ்டர்கள்தான் முளைத்திருக்கின்றன. ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து மாலையிட்டு வணங்கி வருகின்றனர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications