அத்வானியை கொல்ல சதி: பைப் வெடிகுண்டு சப்ளை செய்த நபர் கைது
சென்னை: பெங்களூர் பாஜக அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் டேனியல் பிரகாஷ் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர் அத்வானியைக் கொல்ல பைப் வெடிகுண்டு சப்ளை செய்ததும் இதே டேனியல் பிரகாஷ்தான் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் 17.4.2013 அன்று குண்டு வெடித்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான்புகாரி மற்றும் அவரது கூட்டாளிகளும், கோவையை சேர்ந்த சிலரும் ஈடுபட்டது தெரியவந்தது. பெங்களூர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நெல்லையில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கிச்சான்புகாரியின் கூட்டாளிகளான மேலப்பாளையத்தை சேர்ந்த காஜா, செய்யது ஆகியோர் வீட்டில் நடத்திய சோதனையில் 20 கிலோ வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் நெல்லை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த டேனியல் பிரகாஷ் 35, என்பவரையும் கைது செய்தனர். இவர் வெடிபொருள் ஏஜெண்டு எடுத்து கல்குவாரிகளுக்கு வெடி பொருட்கள் சப்ளை செய்து வந்தார்.
இவர்தான் வெடிபொருட்களை கூடுதல் விலைக்கு கிச்சான் புகாரி கூட்டாளிகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. தற்போது டேனியல் பிரகாஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் கொடுத்த வெடி பொருட்கள்தான் பெங்களூர் பாஜக அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது தடயவியல் அதிகாரிகள் சோதனையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பெங்களூர் போலீசார் நெல்லை வந்து, ஜாமீனில் இருந்த டேனியல் பிரகாசை கடந்த வாரம் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தற்போது பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அவரையும் பெங்களூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவரான டேனியல் பிரகாஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இவருக்கு தமிழகத்தில் அல் உமா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு மூன்று முறை வெடிகுண்டு சப்ளை செய்து இருப்பதும் தெரிய வந்தது.
டேனியல் பிரகாஷ் கடந்த 2011ல் மதுரை அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல வெடிகுண்டு சப்ளை செய்தார் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய குற்றவியல் உதவி கமிஷனர் வெங்கடேஷ் பிரசன்னா கூறுகையில், '2012ல் திருநெல்வேலியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தின்போதும், இவர்தான் வெடிகுண்டு சப்ளை செய்துள்ளார் என்று கூறினார்.
பைப் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டேனியல் பிரகாஷ்தான் இந்த பைப் வெடிகுண்டை சப்ளை செய்தார் என்று தெரிய வந்துள்ளதை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications