தஞ்சையில் மூட்டை மூட்டையாக சிக்கிய 'பாட்டில்கள்' இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் செய்த பகீர்! டிஐஜி அதிரடி
தஞ்சை: தஞ்சையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை வேறொரு நபருக்கு விற்றதாக திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 பேர் காவலர்கள் மீது புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ் குமார், விசாரணை அறிக்கைக்கு பின்னர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடி உள்ளது. சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக புகார்கள் பல்வேறு பகுதிகளி அதிகரித்துள்ளது. இதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

8ம் தேதி பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் போலீசார், சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை மே 8ஆம் தேதி பறிமுதல் செய்தார்கள். மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவர்களையும் பிடித்து சென்றார்கள்.

வேறு நபருக்கு விற்பனை
ஆனால், அதுபற்றி முறையாக வழக்குப்பதிவு செய்யது, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யால், அவரை எச்சரித்துவிட்டு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தினர் வேறொரு நபரிடம் விற்றுவிட்டதாக புகார்கள் எழுந்தன.

அறிக்கை அளிப்பு
இதுதொடர்பாக தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவரின் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் விசாரணை நடத்தினார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலான அறிக்கையை தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ் குமாரிடம் அளித்தார்.

டிஐஜி உத்தரவு
இதையடுத்து திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமை காவலர் ராமமூர்த்தி ஆகியோரை தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பறிமுதல் செய்த மதுபான பாட்டில்களை காவலர்களே விற்ற சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications