இவ்வளவு பெரிய போலீஸ் ஆபரேஷன்ல பினு உட்பட 3 'தலை'கள் மட்டும் தப்பியோடிட்டாங்களாம்!
சென்னையில் பிறந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரவுடிகளில் 3 பேர் மட்டும் தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: பூந்தமல்லி அருகே பிறந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரவுடிகளில் 3 பேர் மட்டும் தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் ரவுடி பினுவின் பிறந்தநாள் சக ரவுடிகளுடன் நேற்றிரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆடல்பாடல் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது ரவுடி பினுவின் பிறந்தநாள். சினிமா பாணியில் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழாவில் ஏராளமான பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
இதனால் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் ரவுடிகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து தனியார் வாகனத்தில் மாற்று உடையில் ரவுடிகளை போல சென்றனர் போலீசார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பங்கேற்ற 76 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இந்நிலையில் போலீசாரின் இந்த அதிரடி ஆபரேஷனில் மூன்று ரவுடிகள் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பினு, கனகு, விக்கி என்ற மூன்று ரவுடிகள் மட்டும் தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மூன்று பேரும் ஏ கிளாஸ் ரவுடிகள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பியோடிய 3 ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.