2ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர சீட் பெற்ற திருநங்கை
காரைக்குடி: காரைக்குடியில் நடைபெற்ற பொறியியல் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வில் திருநங்கை ஒருவர் இடஒதுக்கீட்டின் மூலம் சீட் பெற்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் பி.இ படிப்பிற்கான இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இக்கலந்தாய்வில் கிரேசி பானு என்ற திருநங்கை கலந்து கொண்டு மிண்ணனுவியல் பிரிவில் தான் விரும்பிய அரக்கோணத்தில் அமைந்துள்ள கல்லூரியை தேர்வு செய்தார். சேர்க்கைக்கான உத்தரவை 2 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான செயலாளர் மாலா வழங்கினார்.
கிரேசியின் சொந்த ஊர் தூத்துக்குடி. இவர் கோவில்பட்டியைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் டிப்ளமோ முடித்துள்ளார். அதில் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
வளாகத்தேர்வில் வென்று மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த போதுதான் அவருடைய பாலினத்தில் மாற்றம் ஏற்பட்டது. அதனால் வெளியிலும், அலுவலகத்திலும் பல்வேறு அவமானங்களைச் சந்தித்துள்ளார் அவர். இதனால் வேலையை உதறிவிட்டு மேல்படிப்பு படிக்க உத்தேசித்திருந்தார்.
பானு பி.இ படிக்க விரும்பியபோது, இது குறித்து அண்ணா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்க முடியுமா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளார். ஆனாலும், அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராமல் பாலினத்தை மாற்றி கெஜட்டில் பதிவு செய்து பெரிய போராட்டமே நடத்தி சான்றிதழை பெற்றுள்ளார்.
எவ்வளவோ தகுதிகள் இருந்தும் உரிமையை நிலை நாட்டமுடியாமல் தவிக்கும் திருநங்கைகள் சமுதாயத்திற்கு பானுவின் வெற்றி ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications