திருப்பதி பயணம் திரும்பா பயணமானது எப்படி? : மணப்பாறை கோர விபத்தின் பின்னணி
திருப்பதிக்கு சுற்றுலா சென்றவர்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர்.
Recommended Video

திருச்சி: நாகர்கோவிலில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா சென்றவர்கள் திருச்சி அருகே விபத்தில் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிச்சம் குறைவு, வேன் டிரைவரின் வேகமே 10 பேர் மரணத்திற்கு காரணமாகியுள்ளது.
மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாகர்கோவில் தெற்கு குளத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம்,79. இவர் உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் டெம்போ வேனில் நேற்று திருப்திக்கு புறப்பட்டார். டெம்போ வேனில் டிவைர் உள்பட 15 பேர் இருந்தனர்.

சாலை விபத்து
வேன் நேற்றிரவு 11.30 மணியளவில் மதுரையை கடந்து திருச்சி நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி ஊருக்குள் செல்லும் சர்வீஸ் ரோட்டில் வேன் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் இருந்த வைத்திலிங்கம் உள்பட 4 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகிய 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

மீட்புப்பணி
இதுபற்றி தகவலறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின்னர் 6 பேரை படுகாயங்களுடன் மீட்டனர்.
அவர்கள் மணப்பாறை, திருச்சியில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். ஐவர் திருச்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சோகத்தில் முடிந்த பயணம்
நாகர்கோவிலில் இருந்து திருப்பதி சென்ற சுற்றுலா வேன் விபத்தில் சிக்கிய சம்பவம் அறிந்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இரவு நேரத்தில் சர்வீஸ் சாலையில் வெளிச்சம் குறைவாக இருந்துள்ளது. வேன் டிரைவர் முன்னால் சென்ற வாகனத்தை கவனிக்காமல் வேகமாக ஓட்டிச்சென்றதாலேயே விபத்து நேரிட்டதாக வேனில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர். திருப்பதி பயணம் திரும்பா பயணமாகிவிட்டதே என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விபத்தை தடுக்க முடியாதா?
திருச்சி மணப்பாறை அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐயப்ப பக்தர்கள் விபத்தில் சிக்கி 5 பேர் மரணமடைந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மணப்பாறை அருகே நிகழ்ந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். மணப்பாறையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களால் நொச்சிமேடு பகுதியிலும் அதன் அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியிலும் அடிக்கடி விபத்துகள் நடந்து பலர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட விஜய்.. திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
Kerala Lottery: கோவை போயிட்டு வரும்போது வாங்கிய டிக்கெட்! பாலக்காட்டில் 10 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி பூரிப்பு -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications