எஸ்.எஸ்.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து வைகோ அஞ்சலி
சென்னை: மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் இல்லம் சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பெசன்ட் நகரிலுள்ள மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை உலகினரும் எஸ்.எஸ்.ஆரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அன்றைய தினம் மருதுபாண்டியர் நினைவு தினம் என்பதால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிவகங்கைக்கு சென்றிருந்தார். எனவே எஸ்.எஸ்.ஆரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை.
எனவே இன்றைய தினம் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் இல்லம் சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் குடும்ப நிர்வாகிகளும், கழக முன்னணியினரும் இருந்தனர்.