பாமக- வுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

சென்னை உயர் நீதி மன்றத்தில் , விடுதலை சிறுத்தை கட்சியின் கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளர் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது
பாட்டாளி மக்கள் கட்சியி வரவிருக்கும் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.அதில், ஆரணி, சேலம், கிருஷ்ணகிரி, அரக்கோணம், புதுச்சேரி, விழுப்புரம் , மாயவரம் ஆகிய 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக் கட்சி அறிவித்துள்ளது.
இந்த வேட்பாளர்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இக் கட்சி வேட்பாளர்கள் மேற்கண்ட தொகுதிகளில் பணத்தை செலவழிக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில், இக் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருவது சட்ட விரோதமானது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இந்த நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமிக்கவில்லை.
மேலும், இது போன்ற செயல்கள் மூலம் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடும். எனவே பாமகவால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மேற்கண்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க போலீஸ் டிஜிபி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக வேட்பாளர்களை அறிவித்த பாமக நிறுவனர் மற்றும் அக் கட்சிய வேட்பாளர்கள மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாறு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் உள்துறை செயலாளரையும் பிரதிவாதியாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications