ஜல்லிக்கட்டு வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் வேல்முருகன் கேவியட் மனு
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மாணவர்களின் எழுச்சிப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியுள்ளது.

என்றாலும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அண்மையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் கேவியட் மனுத்தாக்கல் செய்திருந்தது. சட்டத்துக்கு எதிரான மனுக்களை தங்களை கேட்காமல் விசாரிக்கக் கூடாது என்று தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் காந்திகுமார் சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு சார்பில் போடப்பட்டிருக்கும் வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்தும் கேட்கப்படும்.
ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 80க்கும் மேற்பட்ட கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications