ஆரணி அருகே புது "டிசைனில்" உலா வரும் கொசு.. என்னத்தைப் பரப்பப் போகுதோ.. மக்கள் பீதி!
ஆரணி அருகே அரிய வகை கொசுவை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பிடித்து வைத்துள்ளார். இது மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரிய வகை கொசு ஒன்றை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பிடித்து வைத்துள்ளார்.
ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் பூபாலன். வீட்டில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் இல்லாததால் இவரது தூக்கமும் கெட்டது. அப்போது இவரது காலில் ஏதோ கொசு பலமாக கடிப்பதை உணர்ந்தார். அதை கையால் தட்டி விடும் போது அது பெரிய சைஸில் இருந்தது.

பாட்டிலில் அடைத்தார்
உடனே அந்த கொசுவை பாட்டிலில் பிடித்து வைத்துக் கொண்டார். இதை பொதுமக்களிடம் காண்பித்தார். இதை கண்ட மக்கள் இது என்ன புது சைஸில், புது டிசைனில் உள்ளதே என்று குழப்பமடைந்துள்ளனர். ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் பீதி
ஆரணியிலும் சில எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. தற்போது அரிய வகை கொசு என்ற செய்தி ஒன்று இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் சுழன்று வருவதால் மக்கள் மேலும் பீதியில் உள்ளனர்.

நடவடிக்கை தேவை
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்னும் என்னென்ன அரிய வகை பூச்சிகள் கிளம்ப போகிறதோ என்ற கவலை அவர்களை சூழ்ந்துள்ளது. மேலும் அரிய வகை கொசு கூறப்படுவதை ஆய்வு செய்து அவ்வாறிருப்பின் அவற்றால் ஏற்படும் நோயிலிருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு
முன்னாள் ராணுவ வீரர் பிடித்துள்ள பூச்சியானது அரிய வகை கொசுதானா என்பதை பூச்சியியல் துறையினர் ஆய்வு செய்வார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஒரு நாள் கரெண்ட் போனதால் நீண்ட நாள்களுக்கு தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications