அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜய்; வீட்டுக்கு கூட செல்லாமல் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி
Recommended Video
சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அஞ்சலி செலுத்தினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 'சர்கார்' திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்தார். இதனால் கருணாநிதி கடந்த 7ம் தேதி மரணமடைந்து 8ம் தேதி, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது, விஜய்யால் அதில் பங்கேற்க முடியவில்லை.
இருப்பினும் விஜயின், மனைவி சங்கீதா, கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விஜய் லாஸ்வேகாஸ் நகரில் இருந்து விமானத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார்.
விமானநிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது விஜய் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி இருந்தார்.
பத்திரிகையாளர்களை தவிர்ப்பதற்காக மருத்துவமனையின் பின்வாசல் வழியாக அவர் வெளியேறிவிட்டார். அதேபோல் இன்றும் அதிகாலையிலேயே மெரினா நினைவிடத்திற்குச் சென்று தான் பத்திரிகையாளர்கள் அவர் தவிர்த்துவிட்டார்.