மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை... அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இந்த மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பாபநாசம் அணைதான் நீராதாரமாக உள்ளது.
பொதுவாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதமும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதமும் பெய்யும். கடந்த முறை வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழையும் தலை காட்டவில்லை.
இதனால் அணைகளின் நீர் இருப்பு குறைவாக உள்ளது. பாபநாசம் உள்பட 7 கால்வாய்களில் 3 மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஓரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீ்ர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்மட்டம்...
பாநாசம் அணையின் நீர்மட்டம் 59.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1220 கன அடி தண்ணீர் வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 69.13 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1230 கன அடி தண்ணீர் வருகிறது. தற்போது நீர்மட்டம் 91.19 அடியாக உள்ளது. மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் 58.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நிரம்பி வழிகிறது...
குண்டாறு அணை அதன் கொள்ளளவை ஏற்கனவே எட்டி விட்டதால் நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு 8 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அணைப்பகுதியில் மழை 11 மி்மீ பதிவாகியுள்ளது.
தண்ணீர் திறப்பு...
அடவி நயினார் அணையில் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது. நீர்மட்டம் ஓரே நாளில் 5 அடி உயர்ந்து 68 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சாரல் மழை...
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை செங்கோட்டையில் 5 மிமீ மழை, சிவகிரியில் 3 மிமீ மழை, தென்காசியில் 1.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. நெல்லையில் லேசான சாரல் மட்டுமே பெய்தது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications