பொய் வழக்குப் போடுறாங்க.. காப்பாத்துங்க.. முதல்வர் கார் முன் பொத்தென்று விழுந்தவர்களால் பரபரப்பு!
முதலமைச்சரின் வாகனம் முன்பு சிலர் விழுந்து மனு அளித்தனர்.
Recommended Video

கிருஷ்ணகிரி: திருப்பதி செல்லும் தமிழக முதலமைச்சருக்கு கிருஷ்ணகிரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பின்போது, பொய் வழக்குப் போடும் போலீசாரிடம் இருந்து தங்களது ஆட்களை மீட்டுத்தரக்கோரி சிலர் முதலமைச்சரின் வாகனத்தின் முன்பு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருப்பதி செல்கிறார். இதனால் சேலத்தில் இருந்து புறப்பட்ட அவர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் வழியாக திருப்பதி செல்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல்வருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சேலம் மேம்பாலம் சந்திப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின்போது மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொண்டர்களை சந்தித்து விட்ட பின்னர், முதலமைச்சர் வேலூர் நோக்கி காரில் புறப்பட்டார்.
அப்பொழுது திடீரென்று சுமார் ஐந்து பேர் முதல்வரின் வாகனத்தின் முன்பு திடீரென்று விழுந்தனர். இதனையடுத்து, முதல்வரின் பாதுகாவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது எல்லமால் என்பவர் முதல்வரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஓசூர் அடுத்த சானசந்திரம் பகுதியை சேர்ந்த இருளர் இன மக்கள் நாங்கள். கடந்த சனிக்கிழமை அட்கோ போலீசார் எங்களது ஆட்கள் 5 பேரை விசாரணைக்கு என்று அழைத்து சென்றனர். அழைத்து சென்ற போலீசார் எங்களது ஆட்களை அடித்து துன்புறுத்தி சந்தனமரம் கடத்தியதாக ஒப்புக்கொள்ள சொல்கின்றனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்களது ஆட்களை அழைத்து சென்று சந்தனமரம் கடத்தியதாக பொய் வழக்கு போட முயற்சி செய்கிறார்கள். ஆகவே அவர்களை மீட்டு தரவேண்டும்" என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலமைச்சரின் வாகனத்தின் முன்பு திடீரென 5 பேர் விழுந்த செயல் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications