ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: காரணம் தமிழக அரசு?
சென்னை: காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுதான் வலியுறுத்தியதாக புதுவை அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கரச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் திடீரென ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்தது.

ஆளுநர் டிஸ்மிஸ்
இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார் என்ற காரணத்துக்காகவே கட்டாரியா டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

தமிழக அரசுதான் காரணம்
இந்நிலையில் ஜெயேந்திரர் விடுதலைக்கு எதிராக தமிழக அரசுதான் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியது என்று புதுவை அரசின் சட்டத்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா கூறியுள்ளார்.

புதுவை அரசு விளக்கம்
இது தொடர்பாக நக்கீரன் வாரம் இருமுறை இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்:
இது தமிழகத்தின் வழக்கு. இதை நாங்கள் நடத்துகிறோம். வழக்கின் செலவெல்லாம் தமிழக அரசினுடையது. எனவே வழக்கு பற்றிய கருத்தறிவிக்கும் உரிமை தமிழக அரசுக்கும் உண்டு.

குளறுபடி தீர்ப்பு
அந்த வகையில், இந்த வழக்கின் தீர்ப்பு வந்தபோதே, இந்தத் தீர்ப்பில் குளறுபடிகள் அதிகம் இருப்பதாகத் தெரிவதால், மேல்முறையீட்டுக்குச் செல்லவேண்டும் என்றது தமிழக அரசு. இதை தமிழக சட்டத்துறை மூலம், சட்ட ரீதியாகவும் வலியுறுத்தியது.

இரு மாநில விவகாரம்
எனவே இது குறித்து நாங்கள் லீகலாக ஆலோசித்தோம். 90 நாள் கடந்த நிலையில் அப்பீலுக்குப் போகமுடியுமா? என்று ஆலோசித்து, இது இரு மாநில விவகாரம் என்பதால் போகலாம் என்கிற முடிவிற்கு வந்தோம்.

ஆளுநர் உத்தரவு
இதைத் தொடர்ந்து, முறைப்படி புதுவை ஆளுநர் மூலம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ராகேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications