வாசன் வரலாற்றிலேயே முதல் முறையாக .. லோக்சபா தேர்தலில் போட்டி!.. சென்னையில் நிற்பாரா?
சென்னை: ஜி.கே.வாசன் இதுவரை மக்களை நேரில் சந்தித்து எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. கவுன்சிலர் தேர்தல் முதல் லோக்சபா தேர்தல் வரை எதிலும் அவர் போட்டியிட்டதில்லை. இந்த நிலையில் முதல் முறையாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அவருக்கு இந்த நிலை ஏற்பட முக்கியக் காரணமே, தற்போது அவர் வகித்து வந்த ராஜ்யசபா எம். பி பதவியின் ஆயுட்காலம் முடிந்து போனதால்தான்.
மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடலாம் என்றால், அதற்குரிய பலம் தமிழக காங்கிரஸிடமும் இல்லை, கூட்டணிக் கட்சிகளும் இங்கு சிதறிப் போய் விட்டன. எனவே அந்த பாக்கியம் மறுபடியும் வாசனுக்குக் கிடைக்காமல் போய் விட்டது. இதனால் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட வாசன் தீர்மானித்து விட்டாராம்.

சரி எங்க போட்டியிடலாம்
ஆனால் வரும் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதை வாசன் இன்னும் இறுதி செய்யவில்லையாம்.

கூட்டணி வேற இல்லையே
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனேகமாக தனித்துத்தான் போட்டியிடும் நிலை ஏற்படும் என்று தெரிகிறது. இதுவும் வாசனின் யோசனைக்கு முக்கியக் காரணமாம்.

சென்னையில் போட்டியிடலாம்
அதேசமயம், தற்போதைக்கு 2 தொகுதிகளை வாசன் யோசித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். அதாவது தென் சென்னை மற்றும் மயிலாடுதுறை.

மயிலாடுதுறை சொந்த மாவட்டம்
மயிலாடுதுறை தொகுதியானது வாசனின் சொந்த மாவட்டமான தஞ்சையைச் சேர்ந்ததாகும். மூப்பனாருக்கு இன்னும் இங்கு நல்ல மரியாதையும், ஆதரவும் உள்ளது. மூப்பனார் மகன் என்ற பெயரை வைத்து இங்கு எளிதாக வென்று விடலாம் என்று வாசன் ஆதரவாளர்கள் கருதுகிறார்களாம்.

அதிமுகவிடமிருந்து கைப்பற்ற முடியுமா
அதேசமயம், தென் சென்னை தற்போது அதிமுக வசம் உள்ள தொகுதியாகும். இதை அதிமுகவிடமிருந்து கைப்பற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

திமுகவின் மறைமுக ஆதரவைப் பெற்று
இரு தொகுதிகளில் எதில் போட்டியிட்டாலும் திமுகவின் மறைமுக ஆதரவைப் பெற வாசன் முயற்சிக்கிறார் என்றும் செய்திகள் அடிபடுகின்றன. வாசன் மீது திமுகவுக்குத் தனிப்பட்ட முறையில் பாசம் உள்ளது. எனவே வாசன் நின்றால் நிச்சயம் திமுக மறைமுகமாக அவருக்கு ஆதரவைத் தரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆகட்டும்... பார்க்கலாம் .. இது மூப்பனார் அடிக்கடி சொல்வது.. பார்க்கலாம், வாசன் வெல்கிறாரா என்று.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications