Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மதவாத பித்தர்கள்”.. அம்பேத்கருக்கே காவியா? உடனே கைது பண்ணுங்க - போஸ்டரால் கொதித்தெழுந்த திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் காவி உடை அணிந்திருப்பதைபோன்று சுவரொட்டியை ஒட்டியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் முழுவதும் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் அர்ஜுன் சம்பத் படத்துடன் அம்பேத்கர் காவி உடை அணிந்து இருப்பதை போன்றும், அவர் தலையில் திருநீறு, குங்குமம், பட்டை பூசி இருப்பதை போலவும் போட்டோஷாப் செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 கிழிக்கப்பட்ட போஸ்டர்கள்

கிழிக்கப்பட்ட போஸ்டர்கள்

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையிடமும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கும்பகோணம் நகரம் முழுவதும் இந்து மக்கள் கட்சியினர் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை காவல் துறையினர் கிழித்தனர். இருப்பினும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.

 விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம்

விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து இந்து மக்கள் கட்சி போஸ்டர்கள் ஒட்டியதை கண்டித்தும், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

 கைது செய்ய கோரிக்கை

கைது செய்ய கோரிக்கை

விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன், மண்டல செயலாளர் விவேகானந்தன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழனி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குருமூர்த்தி கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

 இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

இதனை தொடர்ந்து கும்பகோணம் போலீசார் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களின் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சியினருக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

 திருமாவளவன் கடும் கண்டனம்

திருமாவளவன் கடும் கண்டனம்

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு இருப்பதாவது, "சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை, பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை, தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 இலட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 மதவாத பித்தர்கள்

மதவாத பித்தர்கள்

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்க மாட்டேன் என உறுதிமொழி ஏற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை - குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+