ஆடி மாசம்.. தலையில் கிரீடம் சூடி அம்மனாகவே மாறிய அன்னபூரணி அரசு அம்மா..பாத பூஜை செய்த பக்தர்கள்
திருவண்ணாமலை: ஆடி மாத இறுதியை முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மா அம்மன் வேடத்தில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததோடு பாத பூஜை செய்து வழிபட்டனர்.
Recommended Video
அன்னபூரணியின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த, கடைக்குட்டி பெண். இவரது கணவர் பெயர் சங்கரநாராயணன். ஆனால் அவருக்கு இவர் ரெண்டாவது மனைவியாம். சங்கரநாராயணன் வேலைக்காக சென்னைக்கு மாறி வந்த நிலையில், குடியிருந்த பகுதியில் அன்னபூரணிக்கு சகஜமாக சில ஆண் நண்பர்கள் உருவாகினர்.
இதனால் அந்த வீட்டுப் பெண்கள் புகார் கிளப்பினராம். இவர்களின் எதிர்வீட்டுக்கு இண்டீரியர் வேலை பார்க்க வந்தவர்தான் அரசு. இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைனில் ஆசி கொடுத்த அம்மா
இயற்கை ஒளி எனும் அறக்கட்டளையை துவக்கி, அதன் மூலம் ஆன்மிக பயிற்சி வகுப்பு நடத்துகிறேன், மன ஆறுதல் அளிக்கிறேன், குறைகளை தீர்க்கிறேன்! என்று சொல்லி மக்களை கவர ஆரம்பித்தனர். சமூக வலைதளங்களில் தற்போதைய சென்சேஷனல் அம்மா, ஆதிபராசக்தி என்ற பல்வேறு பெயர்களால் வலம் வரும் அன்னப்பூரணி அரசு.

ஆதிபராசக்தி மறு அவதாரம்
தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என கூறி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இதை தொடர்ந்து யூ டியூப்பில் ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்தார். பக்தி பரவசத்துடன் அன்னபூரணி அருள் வாக்கு சொல்லும் வீடியோக்கள் காவல்துறை வரை சென்றது. இதனால் அன்னபூரணி ஏற்கனவே திட்டமிட்டிருந்த திவ்ய தரிசனம் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்கள் வழக்கம் போல, அன்னபூரணியை ஆன்லைனில் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

ஆடி மாதம்
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஆஸ்ரமம் அமைக்கப்பட்டு அன்னபூரணி அரசு பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஆடி மாதம் முன்னிட்டு இன்று அன்னபூரணி அரசு அம்மா பக்தர்கள் அம்மன் வடிவத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக சூலம், கிரீடம் அணிவித்து அம்மன் வேடத்தில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்தனர்.

பாதபூஜை
கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஆஸ்ரமம் அமைத்து அங்கு குடும்பம் சார்ந்த பிரச்சனை, மன பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை, திருமணதடை, குழந்தை வரம் உள்ளிட்டவை அம்மாவின் ஆசியாலும் நடைபெற்று வந்த நிலையில் இன்று ஆடி மாதம் முன்னிட்டு அம்மன் வேடத்தில் ஆன்மிக சிறப்பு தரிசனம் நடைபெற்றது. அப்போது ஆண்கள், பெண்கள் பாத பூஜை செய்து கால் தொட்டு வணங்கிச் சூடம் ஏற்றி வழிபட்டனர். இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications