Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றி தோல்வி சகஜம்! ’அவர்’ பேச்சை கேட்காமல் கருணாநிதியே முடிவெடுக்க மாட்டார்!கனிமொழி சொன்ன ரகசியம்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர் : கருணாநிதி தனக்கு ஆலோசனை வேண்டும் என்றால் அன்பழகனை தான் அழைப்பார். எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அவரின் கருத்தை கேட்காமல் கருணாநிதி முடிவெடுக்க மாட்டார் என திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட திராவிட கழகம் சார்பில் திருப்பத்தூர் பகுதியை AD கோபால் நூற்றாண்டு விழா, திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்தநாள் விழா மற்றும் விடுதலை நாளிதழின் சந்தா வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ வ வேலு, திமுக எம்.பி கனிமொழி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கனிமொழி

கனிமொழி

விழாவில் பேசிய கனிமொழி," பேராசிரியர் அன்பழகன் தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மொழிக்கவும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் அயராது பாடுபட்டார். அதைப்போலவே நாமும் அவர் வழியில் சென்று மண்ணையும் மனிதனையும் காப்பாற்ற பாடுபட வேண்டும். கருணாநிதி தனக்கு ஆலோசனை வேண்டும் என்றால் அன்பழகனை தான் அழைப்பார் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அன்பழகனின் கருத்தை கேட்காமல் கருணாநிதி முடிவெடுக்க மாட்டார்.

கருணாநிதி

கருணாநிதி

கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் கொள்கையின் அடிப்படையில் உறவு இருந்தது. ஆசிரியர் சட்ட நுணுக்கங்கள் அதிகம் அறிந்தவர். தந்தை பெரியாரின் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர் ஆசிரியர். அவர் சொன்ன கருத்தை நான் இன்றும் பின்பற்றி வருகிறேன். ஆசிரியர் சொன்ன கருத்து என்னவென்றால் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் என்ற உணர்வை தூக்கி எறிந்து விட்டு சமூகத்தின் மீது மட்டுமே அக்கறை காட்ட வேண்டும் பொது வாழ்வில் வந்துவிட்டால் வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை என்று அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கூறினார் .

சுயமரியாதை

சுயமரியாதை

அதையே நான் இன்றும் பின்பற்றி வருகிறேன். கொள்கை அடிப்படையில் சுயமரியாதை உலகத்தையே உருவாக்க வேண்டும். சமூக நீதிக்காக நாம் பாடுபடுகிறோம் நமக்கு எதிராக உள்ளவர்கள் சமூக அநீதிக்காக செயல்படுகிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது புதிய கொள்கையால் மீண்டும் அடிமை தனத்திற்கு மக்களை எடுத்துச் செல்கிறது.

திராவிட மாடல்

திராவிட மாடல்

ஒருவர் ஒரு பள்ளியில் படித்தால் கூட அந்தப் பள்ளி இயங்க வேண்டும் என்பது திராவிட ஆட்சியின் மாடல். ஆனால் புதிய கொள்கை என்ற திட்டத்தினால் அனைவரையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டுமென பள்ளிகளை மூடச் சொல்கிறது. 10% இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தனக்கான இட ஒதுக்கீட்டை உருவாக்கியுள்ளது. எனவே இந்த சமூகத்தையும் இந்த மண்ணையும் காப்பாற்ற நாம் ஒவ்வொருவராக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என பேசினார். முன்னதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாத் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+