திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை.. தந்தையை இழந்து தவிக்கும் 3 குந்தைகள்
துறையூர் : திருச்சி மாவட்டம் துறையூரில் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை மர்மக்கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி உள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் பிரபு. இவருக்கு உஷா என்ற மனைவியும், தேவி, தேவன், நித்ரா ஆகிய குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாத காரணத்தால் துறையூரில் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்துள்ளார் பிரபு. இந்நிலையில் நேற்று ஆலத்துடையான்பட்டியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தாருடன் வழக்கம் போல் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் அவசரமாக வெளியில் செல்லவேண்டும் ஆட்டோ எடுத்து வருமாறு எதிர் முனையில் பேசியவர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றார் பிரபு.

சரமாரி வெட்டு
பிரபுவின் ஆட்டோ எம்ஜிஆர் நகர் அருகே கடந்து சென்றபோது சில நபர்கள் வழிமறித்துள்ளனர். உடனடியாக தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபுவை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் வீட்டில் இருந்து வெளியேறிய கணவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி அவரைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது எம்ஜிஆர் நகரில் பிரபு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிரபுவின் மனைவி உஷா கதறி அழுததை பார்த்து அக்கம் பக்கத்தார் கூடினர். சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை
தகவல் அறிந்த துறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிரபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருள்மணி, துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உப்பிலியபுரம் துணை ஆய்வாளர் சாந்தகுமார் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பிரபுவுக்கு முன்விரோதம் ஏதேனும் உள்ளதா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 குழந்தைகள், மனைவி துயரம்
தற்போது கணவனை இழந்த மனைவியும், தந்தையை இழந்த 3 குந்தைகளும் எதிர்காலத்தை நோக்கிய அச்சத்தோடு பிரபுவின் உடலைப் பெற்றுக்கொள்ள பிணவறை அருகே காத்துக்கிடக்கின்றனர்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications