காப்பாற்றிய கனிமொழி மீதே புகார்! அமைச்சர் கீதாஜீவனை வட்டமடிக்கும் சர்ச்சை! என்ன பின்னணி?
தூத்துக்குடி: திமுக மக்களவை உறுப்பினரும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி குறித்து கட்சி தலைமையிடம் அமைச்சர் கீதாஜீவன் புகார் பட்டியல் வாசித்ததாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கனிமொழி எம்.பி.யிடம் அவரது சொந்த தங்கை போல் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைந்து செயல்பட்ட அமைச்சர் கீதாஜீவன், திடீரென அவருக்கு எதிராக திரும்பியிருப்பது திமுகவில் பேசுபொருளாக உள்ளது.
எதிர்தரப்பினரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் அளித்த பல புகார்களில் கீதாஜீவன் சிக்கிய போதும் கூட, அவரை அதிலிருந்து காப்பாற்றியவர் கனிமொழி எம்.பி.எனக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி
கலைஞரின் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்ட பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட திமுகவில் மாவட்டச் செயலாளராக கால் நூற்றாண்டிற்கும் மேலாக கோலோச்சியவர். 4 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் அவர் காலமானதை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், மற்றொன்றுக்கு அமைச்சர் கீதா ஜீவனும் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

பல்வேறு புகார்கள்
பெரியசாமி உயிரோடு இருந்த காலத்தில் இருந்தே அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதாஜீவனுக்கும் ஏழாம் பொருத்தம் தான். கீதா ஜீவன் செயல்பாடுகள், மாவட்டத்தில் தனக்கு கொடுக்கும் இடையூறுகள் குறித்தெல்லாம் அனிதா ராதாகிருஷ்ணன் பலமுறை ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். அப்போதெல்லாம் அதில் தலையிட்டு ஸ்டாலினின் கோபத்தை தணித்து விசாரணையில் இருந்து கீதாஜீவனை காப்பாற்றியவர் தான் கனிமொழி.

காப்பாற்றியவர்
இதுமட்டுமல்லாமல் தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடவில்லை என்று திமுகவினர் தலைமைக்கு புகார்களை தட்டிவிட்ட போதும், தேவேந்திரகுல வேளாளர் தொடர்பான ஆடியோ சர்ச்சையில் சிக்கி சமூக வலைதளங்களில் வைரலாகி கீதாஜீவனுக்கு பெரும் நெருக்கடி வந்தபோதும்,
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கீதாஜீவன் செயல்படுகிறார் என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தபோதும், அவைகளில் எல்லாம் தலையிட்டு கீதாஜீவனை கட்சி தலைமையின் கோபத்தில் இருந்து காப்பாற்றியவர் கனிமொழி.

பட்டிமன்றங்கள்
இப்படி பல்வேறு சிக்கல்களில் இருந்து தன்னை காப்பாற்றி இன்று அமைச்சரவையில் இடம் கிடைக்கும் வகையில் பரிந்துரையும் செய்த கனிமொழி மீது கீதா ஜீவன் புகார் அளித்ததாக கூறப்படும் விவகாரம் தான் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. இதனிடையே கனிமொழி கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு வரும் சூழலில் இப்படி ஒரு புகார் அளிக்க என்ன காரணமாக இருக்கும் என தூத்துக்குடி உ.பி.க்கள் பட்டிமன்றங்கள் நடத்தி வருகின்றனர்.

கீதாஜீவன் தரப்பு
இதனிடையே கனிமொழி எம்.பி. மீது தனக்கு எந்த மனவருத்தமும் இல்லை என்றும் அவர் மீது தலைமையிடம் புகாரே அளிக்கவில்லை எனவும் அமைச்சர் கீதாஜீவன் தரப்பு கூறுவது குறிப்பிடத்தக்கது. கட்சியில் பிடிக்காத சில விஷமிகளின் வேலையாக இருக்கும் என அமைச்சர் கீதாஜீவன் தரப்பு விளக்கம் அளித்து வருவது இங்கு கவனிக்கத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications