Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தம் வராமல் சுவரில் ஓட்டைபோடுவது எப்படி? யூ-டியூப் பார்த்து நடந்த கொள்ளை

சிவ பக்தரான டீக்கா ராமன், நகைக் கடையில் முதலில் தங்கத்தினால் ஆன ருத்ராட்சத்தை திருடி அணிந்து கொண்டு பிறகு மற்ற நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: நகைக்கடை சுவற்றில் சத்தம் வராமல் ஓட்டை போட்டு திருடுவது எப்படி என்றும் கொள்ளையடித்த நகைகளை உருக்குவது எப்படி என்றும் யுடுயூப் பார்த்து கற்றுக்கொண்டு அதன்படியே ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தை தனி ஒருவனாக அரங்கேற்றியுள்ளார் டீக்காராமன். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட டீக்காராமன் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

சிங்கமுகமூடி அடையாளம் தெரியாத அளவிற்கு விக் வைத்து பிபி கிட் உடை அணிந்த ஒல்லியான உருவம் நகைக்கடையில் இருந்து 15 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றதை சிசிடிவி காட்சிகளில் பார்த்த காவல்துறையினர் திகைத்துத்தான் போனார்கள்.

கொள்ளையடித்தது எத்தனை பேராக இருக்கும் என்று விசாரித்த காவல்துறையினருக்கு இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது ஒரே ஒரு நபர் என்றும் அவர் உள்ளூர்காரர் டீக்காராமன்தான் என்பதும் தெரியவரவே ஸ்கெட்ச் போட்டு தூக்கினர்.

செட்டில் ஆக நினைத்த ராமன்

செட்டில் ஆக நினைத்த ராமன்

சின்னச் சின்ன திருட்டு சம்பவங்களை செய்து அலுத்துப்போன டீக்காராமனுக்கு பெரிய அளவில் கொள்ளையடித்து விட்டு செட்டில் ஆக வேண்டும் என்பது ஆசை. அதற்காக அவர் தேர்வு செய்துதான் நகைக்கடை. சுவற்றில் சத்தம் வராமல் ஓட்டை போடுவது எப்படி என்று யுடுயூப் மூலம் கற்றுக்கொண்டு அதனை அரங்கேற்றியுள்ளார்.

காட்டிக்கொடுத்த ருத்ராட்சம்

காட்டிக்கொடுத்த ருத்ராட்சம்

சிவ பக்தரான டீக்கா ராமன், நகைக் கடையில் முதலில் தங்கத்தினால் ஆன ருத்ராட்சத்தை திருடி அணிந்து கொண்டு பிறகு மற்ற நகைகளை கொள்ளையடித்திருக்கிறார். அத்தனை நகைகளையும் புதைத்து வைத்து விட்டு ருத்ராட்சத்தை மட்டும் அணிந்திருந்தார். அதுவே அவரை காட்டிக்கொடுத்து விட்டது.

தனிப்படைகள் அமைப்பு

தனிப்படைகள் அமைப்பு

மீட்கப்பட்ட நகைகளுடன் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி பாபு, கடந்த 15-ம் தேதி அதிகாலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த தனிப்படையினர் மிகக் கடினமாக புலன் விசாரணை செய்து, ஐந்து நாள்களுக்குள்ளேயே குற்றவாளியை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மீட்டெடுத்தனர். இதன் மொத்த மதிப்பு 8 கோடி ரூபாய் என்றார்.

100 சதவிகித நகைகள் மீட்பு

100 சதவிகித நகைகள் மீட்பு

தனிப்படையினர் விஞ்ஞான பூர்வமாகவும், பழைய முறையைப் பின்பற்றியும் தூங்காமல் இரவு பகலாக உழைத்து, 100 சதவிகித நகைகளையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட டீக்காராமன். இவர் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்குஉட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர். ஒடுகத்தூர் அருகே அவர் கைது செய்யப்பட்டார். நகைகளை ஒடுகத்தூர் பகுதியிலுள்ள சுடுகாட்டிலேயே புதைத்துவைத்திருந்தார். அவரை அங்கு அழைத்துச்சென்று, மாலையில் நகைகளை மீட்டனர் என்று டிஐஜி பாபு கூறினார்.

Recommended Video

    பரபரப்பு சிசிடிவி வீடியோ: சிங்க முகமூடி, கோட் அணிந்து நகைக்கடையில் கொள்ளை... பெங்களூரு, ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை!
    கம்பி எண்ணுவது எப்படி

    கம்பி எண்ணுவது எப்படி

    கொள்ளையன் டீக்கா ராமன் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-இல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றவாளியின் கை, கால்களில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து, போலீசாரிடம் நீதிபதி கேள்வி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் விளக்கம்
    கொள்ளையன் டீக்கா ராமனும், கீழே விழுந்ததில் அடிபட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து டீக்காராமனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். யுடுயூப் பார்த்து நகைகளை கொள்ளையடிக்கவும் உருக்குவது எப்படி என்றும் கற்றுக்கொண்ட டீக்கா ராமனுக்கு சிறையில் கம்பி எண்ணுவது எப்படி என்று காவலர்கள் கற்றுக்கொடுத்துக்கொடுத்துக்கொண்டுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+