சத்தம் வராமல் சுவரில் ஓட்டைபோடுவது எப்படி? யூ-டியூப் பார்த்து நடந்த கொள்ளை
சிவ பக்தரான டீக்கா ராமன், நகைக் கடையில் முதலில் தங்கத்தினால் ஆன ருத்ராட்சத்தை திருடி அணிந்து கொண்டு பிறகு மற்ற நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
வேலூர்: நகைக்கடை சுவற்றில் சத்தம் வராமல் ஓட்டை போட்டு திருடுவது எப்படி என்றும் கொள்ளையடித்த நகைகளை உருக்குவது எப்படி என்றும் யுடுயூப் பார்த்து கற்றுக்கொண்டு அதன்படியே ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தை தனி ஒருவனாக அரங்கேற்றியுள்ளார் டீக்காராமன். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட டீக்காராமன் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
சிங்கமுகமூடி அடையாளம் தெரியாத அளவிற்கு விக் வைத்து பிபி கிட் உடை அணிந்த ஒல்லியான உருவம் நகைக்கடையில் இருந்து 15 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றதை சிசிடிவி காட்சிகளில் பார்த்த காவல்துறையினர் திகைத்துத்தான் போனார்கள்.
கொள்ளையடித்தது எத்தனை பேராக இருக்கும் என்று விசாரித்த காவல்துறையினருக்கு இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது ஒரே ஒரு நபர் என்றும் அவர் உள்ளூர்காரர் டீக்காராமன்தான் என்பதும் தெரியவரவே ஸ்கெட்ச் போட்டு தூக்கினர்.

செட்டில் ஆக நினைத்த ராமன்
சின்னச் சின்ன திருட்டு சம்பவங்களை செய்து அலுத்துப்போன டீக்காராமனுக்கு பெரிய அளவில் கொள்ளையடித்து விட்டு செட்டில் ஆக வேண்டும் என்பது ஆசை. அதற்காக அவர் தேர்வு செய்துதான் நகைக்கடை. சுவற்றில் சத்தம் வராமல் ஓட்டை போடுவது எப்படி என்று யுடுயூப் மூலம் கற்றுக்கொண்டு அதனை அரங்கேற்றியுள்ளார்.

காட்டிக்கொடுத்த ருத்ராட்சம்
சிவ பக்தரான டீக்கா ராமன், நகைக் கடையில் முதலில் தங்கத்தினால் ஆன ருத்ராட்சத்தை திருடி அணிந்து கொண்டு பிறகு மற்ற நகைகளை கொள்ளையடித்திருக்கிறார். அத்தனை நகைகளையும் புதைத்து வைத்து விட்டு ருத்ராட்சத்தை மட்டும் அணிந்திருந்தார். அதுவே அவரை காட்டிக்கொடுத்து விட்டது.

தனிப்படைகள் அமைப்பு
மீட்கப்பட்ட நகைகளுடன் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி பாபு, கடந்த 15-ம் தேதி அதிகாலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த தனிப்படையினர் மிகக் கடினமாக புலன் விசாரணை செய்து, ஐந்து நாள்களுக்குள்ளேயே குற்றவாளியை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மீட்டெடுத்தனர். இதன் மொத்த மதிப்பு 8 கோடி ரூபாய் என்றார்.

100 சதவிகித நகைகள் மீட்பு
தனிப்படையினர் விஞ்ஞான பூர்வமாகவும், பழைய முறையைப் பின்பற்றியும் தூங்காமல் இரவு பகலாக உழைத்து, 100 சதவிகித நகைகளையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட டீக்காராமன். இவர் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்குஉட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர். ஒடுகத்தூர் அருகே அவர் கைது செய்யப்பட்டார். நகைகளை ஒடுகத்தூர் பகுதியிலுள்ள சுடுகாட்டிலேயே புதைத்துவைத்திருந்தார். அவரை அங்கு அழைத்துச்சென்று, மாலையில் நகைகளை மீட்டனர் என்று டிஐஜி பாபு கூறினார்.
Recommended Video

கம்பி எண்ணுவது எப்படி
கொள்ளையன் டீக்கா ராமன் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-இல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றவாளியின் கை, கால்களில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து, போலீசாரிடம் நீதிபதி கேள்வி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் விளக்கம்
கொள்ளையன் டீக்கா ராமனும், கீழே விழுந்ததில் அடிபட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து டீக்காராமனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். யுடுயூப் பார்த்து நகைகளை கொள்ளையடிக்கவும் உருக்குவது எப்படி என்றும் கற்றுக்கொண்ட டீக்கா ராமனுக்கு சிறையில் கம்பி எண்ணுவது எப்படி என்று காவலர்கள் கற்றுக்கொடுத்துக்கொடுத்துக்கொண்டுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications