'எவ்வளவு சொல்லியும் கேட்கல'... தனியார் மதுபான கூடத்தை சல்லி, சல்லியாக நொறுக்கிய மக்கள்.. பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அன்னபூர்ணாயாபுரத்தில் கடந்த 30-ம் தேதி தனியாருக்கு சொந்தமான மதுபான கூடம் திறக்கப்பட்டது. கோவில் மற்றும் பள்ளி அருகில் இந்த தனியார் மதுபான கூடம் அமைந்துள்ளதாக கூறப்டுகிறதது.

Recommended Video

    எவ்வளவு சொல்லியும் கேட்கல... தனியார் மதுபான கூடத்தை சல்லி, சல்லியாக நொறுக்கிய மக்கள்.. பரபரப்பு!

    இதனால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எனக்கூறி அந்த கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தி[ல் ஈடுபட்டு வருகின்றனர்.

    தனியார் மதுபான கூடம்

    தனியார் மதுபான கூடம்

    இந்த மதுபான கூடத்தை மூடக்கோரி வெம்பக்கோட்டை தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் மக்கள் கொடுத்த மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திரளாக தனியார் மதுபான கூடத்துக்கு சென்றனர்.

    சல்லி, சல்லியாக நொறுக்கினார்கள்

    சல்லி, சல்லியாக நொறுக்கினார்கள்

    மதுபான கூடத்தை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென மதுபான கூடத்தை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். தனியார் மதுபானகூடம் மற்றும் 50 ஆயிரம் ருபாப் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் கடையில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டம்

    மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டம்

    மேலும் தனியார் மதுபான கூடத்தை நிரந்தரமாக மூடக்கோரி அதன் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெம்பக்கோட்டை தாசில்தார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    'சீல்' வைத்தனர்

    'சீல்' வைத்தனர்

    மதுபான கூடத்தை நிரந்தரமாக மூடினால்தான் அங்கு இருந்து செல்வோம் என்று மக்கள் கூறினார்கள். இதனை தொடர்ந்து தனியார் மதுபான கூடத்தை பூட்டி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேலும் தனியார் மதுபான கூடத்தை அடித்து நொறுக்கிய அன்னபூர்ணியாபுரம் கிராம மக்கள் 50 பேர் மீது வெம்பக் கோட்டை போலீசார் வழக்கு பதிவுப்செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அன்னபூர்ணாயாபுரத்தில் நீண்ட நேரம் பதற்றம் நிலவியது. அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+